×

ரூ.4000 கோடி மதிப்பில் 30 ஆண்டுக்கு மாநில வளர்ச்சி கடன் 6.83% ஏலத்தில் விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பில் 30 ஆண்டுக்காலங்களுக்கு ரூ.2000 கோடி மற்றும் மறுவெளியீட்டின் வாயிலாக ரூ.2000 கோடி மதிப்புள்ள 6.83 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2031 ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 12ம் தேதி நடத்தப்படும்.

போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவைமுறையில்மின்னணு படிவத்தில் வரும் 12ம் தேதியன்று சமர்பிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ரூ.4000 கோடி மதிப்பில் 30 ஆண்டுக்கு மாநில வளர்ச்சி கடன் 6.83% ஏலத்தில் விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்